தனக்கான கல்லறையை இறப்பதுற்கு முன்பே கட்டிவைத்துள்ள நடிகர் ராஜேஷ்! காரணம் என்ன தெரியுமா?
ஆடு திருடிய தலீத் இளைஞர்களை தலைகீழாக கட்டி தொங்கவிட்ட கிராம மக்கள்.!

தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தை சேர்ந்த கொமுராஜுலா ராமுலு. விவசாயியான இவர் ஆடு மேய்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது ஆட்டு மந்தையிலிருந்து ஆடு காணாமல் போயுள்ளது.
இதனையடுத்து அந்த பகுதியில் ஆடும் வைத்துக் கொண்டிருந்த தேஜா மற்றும் அவரது நண்பர்களான பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்கள் மீது கொமுராஜுலா ராமுலுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை தனது ஆட்டு பண்ணைக்கு அழைத்து வந்துள்ளார்.
Two youth hung upside down over smoke pile, beaten in #Telangana over suspicion of #GoatTheft, in #Mandamarri #Mancheria; They were subsequently let off & lodged police complaint; Accused were booked under prevention of atrocities against #SC/ST Act
— Siraj Noorani (@sirajnoorani) September 3, 2023
Via-@umasudhir pic.twitter.com/OBydMmfMAm
அங்கு இருவரையும் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடியில் தீ வைத்து புகை மூட்டி கடுமையாக தாக்கியுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில், இந்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், பட்டியலின இளைஞர்களை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.