கொரோனா பாதிப்பில் சீனாவை மிஞ்சிய மகாராஷ்டிரா! இன்று ஓரே நாளில் 120 பேர் உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பில் சீனாவை மிஞ்சிய மகாராஷ்டிரா! இன்று ஓரே நாளில் 120 பேர் உயிரிழப்பு!



corona-increased-in-magarastira

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா அதிகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவிலேயே, மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இன்று ஒருநாள் மட்டும் மகாராஷ்டிராவில் 2,259 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

coronaஅதேபோல் இன்று  ஒருநாள் மட்டும் 120 பேர் கொரோனா நோயால் உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில் 3,289 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் சீனாவை மிஞ்சிய மகாராஷ்டிராவில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 90,787ஆக ஆக உயர்ந்துள்ளது.