17 வயது சிறுமியுடன் காதல்.. பெண் கேட்டு கொடுக்காததால், இளைஞன் தூக்கிட்டு சாவு.!

17 வயது சிறுமியுடன் காதல்.. பெண் கேட்டு கொடுக்காததால், இளைஞன் தூக்கிட்டு சாவு.!



chikmagalur-man-suicide-love-failure-love-with-minor-gi

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூர், என்.ஆர் புரா கிராமத்தில் வசித்து வருபவர் கிஷோர் குமார் (வயது 24). இவர் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறவே, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். 

இதனைத்தொடர்ந்து, குமார் தனது பெற்றோரிடம் சென்று விஷயத்தை கூறி வரன் கேட்டுள்ளார். அவர்களும் சம்மதம் தெரிவிக்கவே, சிறுமியின் பெற்றோரிடம் சென்று வரன் கேட்டுள்ளார். ஆனால், தங்களின் மகளுக்கு 17 வயதே ஆவதால் திருமணம் செய்து வைக்க இயலாது. ஒரு வருடம் ஆகட்டும் என்று தெரிவித்துள்ளனர்.

karnataka

இதனால் மனமுடைந்த கிஷோர் நேற்று வனப்பகுதிக்கு சென்று மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த என்.ஆர் புரா காவல் துறையினர் கிஷோர் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.