ஆதார் - பாண் நம்பர் இணைக்காவிடில் பாண் கார்டு முடக்கம் - மத்திய அரசு உச்சகட்ட எச்சரிக்கை.!

ஆதார் - பாண் நம்பர் இணைக்காவிடில் பாண் கார்டு முடக்கம் - மத்திய அரசு உச்சகட்ட எச்சரிக்கை.!



Central Govt Announce Link Aadhar Pan card

 

வருமான வரி செலுத்தும் நிரந்தர கணக்கு எண்ணோடு ஆதார் கார்டு நம்பரை இணைக்க மத்திய அரசு ஏற்கனவே பலகட்ட அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. 

இதனால் வருமானவரி செலுத்தும் பலரும் பாண் எண்ணுடன் ஆதாரை இணைத்து வந்தார்கள். இதற்கிடையில், மார்ச் 31, 2023 க்குள் பாண் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும் எனவும் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டது.

Central Govt

இந்நிலையில், 31 மார்ச் 2023 க்குள் ஆதார் - பாண் கார்டு இணைக்காத பட்சத்தில், 1 ஏப்ரல் 2023 முதல் ஆதார் - பாண் இணைக்காத கார்டுகள் செயல்படாது என்று விருத்திக்காட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.