கார் - லாரி நேருக்குநேர் மோதி கோரவிபத்து... துடிதுடித்து பறிபோன தந்தை - மகன் உயிர்..! பதறவைக்கும் காட்சிகள்..!

கார் - லாரி நேருக்குநேர் மோதி கோரவிபத்து... துடிதுடித்து பறிபோன தந்தை - மகன் உயிர்..! பதறவைக்கும் காட்சிகள்..!


Car and lorry accident in karnataka

கார் - லாரி நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த தந்தை - மகன், கர்நாடக மாநிலத்தில் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 17), அஞ்சப்பா (வயது 40), புனித் (வயது 15), கார்த்திக் (வயது 19), ராமச்சந்திரா (வயது 40) உட்பட 10 பேர் 2 கார்களில் தட்சிண கன்னடாவில் தர்மஸ்தாலா கோவிலுக்கு சென்றுள்ளனர். 

இவர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம் ஆலூர் அருகே சென்றபோது, எதிரில் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து இவர்களின் கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தந்தை - மகனான அஞ்சப்பா மற்றும் கார்த்திக் ஆகியோர் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

accident

மேலும் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மற்றொரு காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக எந்தவிதகாயமும் இன்றி உயிர்தப்பினர். இந்த தகவலறிந்து வந்த காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்தோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது குறித்த விசாரணை நடந்து வருகிறது.