தங்கையை கர்பமாக்கிய அண்ணன்.! பிரசவத்திற்க்காக மருத்துவமனைக்கு சென்ற 12 வயது சிறுமி.!

தங்கையை கர்பமாக்கிய அண்ணன்.! பிரசவத்திற்க்காக மருத்துவமனைக்கு சென்ற 12 வயது சிறுமி.!


brother abused his sister

ஆந்திர மாநிலம், நெல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயிக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.  12 வருடங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரது மனைவி கணவரிடம் 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்றுவிட்டார்.

இதனையடுத்து அந்த விவசாயி 2-வதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 12 வயதில் மகள் உள்ளார். கொரோனா தொற்று காரணமாக அவரது மகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். அந்த சமயத்தில் முதல் மனைவியின் மகன் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சிறுமிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டு அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 12 வயது சிறுமி பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் சைல்டு ஹெல்ப் லைன் மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் அண்ணனே சிறுமியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிறுவனை தேடி வருகின்றனர்.