ஆசீர்வாதம் பண்ணும்போது கூட... இளையராஜாவை விமர்சித்த நெட்டிசன்! கூலாக விளக்கமளித்த சினேகனின் மனைவி!!
திருணம் முடிந்த 5 நிமிடத்தில் 5 மாதம் கர்ப்பமான இளம் பெண்! விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!
திருணம் முடிந்த 5 நிமிடத்தில் 5 மாதம் கர்ப்பமான இளம் பெண்! விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!

மேற்குவங்க மாநிலம் பிர்பும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதன்படி சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் சடங்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் மணப்பெண் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இரு வீட்டாரும் மணப்பெண்ணை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மணப்பெண்ணை சோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் பெண்ணை தங்கள் மகனுக்கு திருமணம் செய்துவைத்ததற்காக மணமகன் வீட்டார், மணமகள் வீட்டாருடன் சண்டைக்கு செல்ல பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த பெண்ணை விசாரித்ததில் தனது ஆண் நண்பருடன் நெருங்கி பழகியதில் அந்த பெண் கர்ப்பமானது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.