கழற்றிவிட்ட காதலி., கை-கால்களை பிளேடால் அறுத்துக்கொண்டு இரத்த கிளறியான காதலன்.! பதறவைக்கும் சம்பவம்.!

கழற்றிவிட்ட காதலி., கை-கால்களை பிளேடால் அறுத்துக்கொண்டு இரத்த கிளறியான காதலன்.! பதறவைக்கும் சம்பவம்.!



Bihar Youngster Suicide Attempt When her Boyfriend 

 

பீகார் மாநிலத்தில் உள்ள பேகுசராய் பகுதியை சேர்ந்த இளைஞர் கன்ஹியா குமார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். 

காதல் ஜோடி ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக காதலி பேசாமல் இருந்துள்ளார். குமார் காதலிக்கு போனில் தொடர்பு கொண்டும் பலனில்லை. 

Bihar

ஒருகட்டத்தில் தான் காதலை முறித்துவிட்டதாக கன்ஹியா குமாரின் காதலி சொல்லவே, மனதளவில் உடைந்துபோன இளைஞர் தனது உடலில் பல இடங்களில் பிளேடால் கிழித்து தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார். 

நல்வாய்ப்பாக குமாரின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி, இளைஞருக்கு அறிவுரை கூறி இருக்கின்றனர். அவரை சிகிச்சைக்கு பின் கவுன்சிலிங் மையத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.