ஐடி ஊழியர்களுக்கு புதிய தலைவலி.. வரவு எட்டணா.. செலவு பத்தணா.!!



banglore flats price are very high

பெங்களூரு மாநகரத்தில் சமீப காலமாக வீட்டு வாடகை பல மடங்கு உயர்ந்திருப்பதாக பயனாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் தங்கி பலரும் பணியாற்றிய தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்பி வைப்பார்கள். மேலும், சிலர் அங்கேயே தனது குடும்பத்துடன் செட்டில் ஆகிவிடும் நிலைமையும் இருக்கிறது. இப்படி பலரும் வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் சென்று தங்கி வேலை செய்து வருகின்றனர். 

it job

ஐ டி நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் வந்து தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். மிகப்பெரிய ஐடி சாம்ராஜ்யமாக விளங்கும் பெங்களூருவில் தற்போது வீட்டு வாடகை தொகை பல மடங்கு உயர்ந்திருப்பதாக அந்த இளைஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இதையும் படிங்க: அப்படிப்போடு.. தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி கையில் பிரதமர் மோடியின் வலைப்பக்கம்.. பெண்கள் தின வாழ்த்துடன் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தங்களுக்கு கம்பெனியில் இருந்து வரும் சம்பளத்தை விட வீட்டு வாடகை அதிகம் இருப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு அரசு தரப்பில் இருந்து ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது அவர்களின் ஏக்கமாக இருக்கிறது.

இதையும் படிங்க: பெற்றோரின் கண்டிப்பால் வீட்டில் இருந்து வெளியேறிய 12 வயது சிறுமி ஐவர் கும்பலால் பலாத்காரம்..!