பூஜை போட்டதும் பயர்.. பற்றி எரிந்து வெடித்து சிதறிய புத்தம்புது புல்லட்..!



Andra Pradesh Bullet Two Wheeler Explodes

புதியதாக வாங்கப்பட்ட புல்லட் வாகனத்திற்கு பூஜை போடும் போது, அது தீப்பிடித்து வெடித்து சிதறிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனந்தப்பூர் மாவட்டத்தில், புதியதாக வாங்கப்பட்ட வாகனத்திற்கு பூஜை செய்யப்பட்டது. அப்போது, அது திடீரென வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள குண்டக்கல் கசாபுரம் பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. 

இந்த கோவில் முன்பு இருசக்கர வாகன உரிமையாளர், தனது வாகனத்தை நிறுத்திவிட்டு பூஜை செய்துள்ளார். அந்த சமயத்தில், வாகனத்தில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்படவே, தீயை அணைக்க முயற்சித்தும் பலனில்லை. இதனால் புல்லட் வாகனமும் முற்றிலும் வெடித்து சிதறியது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் அங்கிருந்து உயிரை கையில் பிடித்து தலைதெறிக்க ஓடியதால் உயிர் தப்பினர். இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Andra Pradesh

அப்போது, புல்லட்டில் லேசாக தீப்பிடித்துள்ளது. தீயை அணைக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக புல்லட் வெடித்து சிதறியது. குபீரென பல அடி உயரத்திற்கு தீப்பிழம்பு எழுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் சிதறி ஓடினர்.

பின்னர் அருகில் சென்ற சிலர்  தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புல்லட் வெடித்து தீப்பிடித்தபோது எடுத்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.