நடிகை அஞ்சலியா இது.? உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.!?
14 வயது சிறுமியை சீரழித்து கர்ப்பமாக்கிய உடற்கல்வி ஆசிரியர்..!
14 வயது சிறுமியை சீரழித்து கர்ப்பமாக்கிய உடற்கல்வி ஆசிரியர்..!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உயர்நிலைப்பள்ளியில், உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் துர்கா பிரசாத் (வயது 35).
இவர் அப்பள்ளியில் பயின்று வரும் 09ம் வகுப்பு மாணவியிடம் நெருக்கமாக பழகி வந்ததாக தெரியவருகிறது. ஒருகட்டத்தில் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறிய துர்கா பிரசாத், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் மாணவி கர்ப்பமான நிலையில், தனது மகளின் செயல்பாடுகளில் உள்ள மாற்றத்தை பெற்றோர் அறிந்துள்ளனர். விசாரணையில், அவர் ஆசிரியரால் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமானது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, மாணவியின் கர்ப்பம் குறித்த விவகாரத்தை அறிந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் துர்கா பிரசாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.