சொத்து தகராறில் கொடுமை.. நெஞ்சில் சுமந்த தந்தையின் நெஞ்சு பழுக்க மிதி.. மகன் அட்டூழியம்.!

சொத்து தகராறில் கொடுமை.. நெஞ்சில் சுமந்த தந்தையின் நெஞ்சு பழுக்க மிதி.. மகன் அட்டூழியம்.!



Andhra Pradesh SOn Beat Parents 

 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அன்னமயா மாவட்டம், மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த நபர், தனது பெற்றோரின் சொத்துக்களை கேட்டு அவ்வப்போது தொந்தரவு செய்து வந்துள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், ஆத்திரமடைந்த மகன் தனது தாயை கடுமையாக தாக்கினார். மேலும், நெஞ்சில் சுமந்து வளர்த்த தந்தையின் நெஞ்சிலே மிதித்து தாக்குதல் சம்பவம் நடந்தது. 

இதனை அங்கிருந்த நபர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிடவே, அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நேரடியாக சென்று தம்பதிக்கு ஆறுதல் கூறி அவரின் மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.