பகீர் வீடியோ! சாக்கடைத் தண்ணீரில் ரோட்டோர கடையில் சமையலா....இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி காட்சி!!!



akola-sewage-water-food-safety-viral-video

மகாராஷ்டிர மாநிலம் அகோலா நகரில் எடுத்ததாக கூறப்படும் ஒரு வைரல் வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திக்ரா சௌக் பகுதியில் பதிவு செய்யப்பட்ட இந்தக் காட்சி, உணவு பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.

பேருந்து நிலையம் அருகே சந்தேகமான காட்சி

அகோலாவின் திக்ரா சௌக் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஒருவர் பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் சாக்கடைத் தண்ணீர் நிரப்பும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இது எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்ற கேள்வி உடனடியாக எழுந்துள்ளது.

காலை உணவு கடைகள் மீது சந்தேகம்

அந்தப் பகுதியில் அதிகாலை 4 மணி முதலே போஹா, சமோசா, கச்சோரி போன்ற உணவுகளை விற்கும் தள்ளுவண்டி கடைகள் அதிகம் இயங்குகின்றன. இதனால், அந்தத் தண்ணீர் உணவு தயாரிப்பிற்கோ அல்லது பாத்திரங்கள் கழுவுவதற்கோ பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: தண்ணீரிலும் கலப்படம்.... ரயில் பயணிகளே பிராண்டட் மினரல் வாட்டர் பாட்டிலில் அசுத்தமான தண்ணீரை நிரப்பி விற்கும் அதிர்ச்சி காட்சி!

அதிகாரிகள் நடவடிக்கை கோரி வலியுறுத்தல்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து, உணவகங்களின் சுகாதார நிலை குறித்து மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் விரைவில் ஆய்வு மேற்கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

இதையும் படிங்க: வலுக்கட்டாயமாக பசுவின் வாயில் மதுவை ஊற்றி..... குடிகார கும்பல் செய்த கொடூர வீடியோ! கொந்தளிப்பில் மக்கள்...!!!