பலவந்தமாக பலாத்காரம்!.கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு: கூடா நட்பால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்..!

பலவந்தமாக பலாத்காரம்!.கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு: கூடா நட்பால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்..!



A young girl who tragically died of friendship

உத்தர பிரதேசம், வாரணாசி நகரில்  உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி கல்லூரியிரில் படித்து வந்த இளம் பெண் (22). இவருக்கு 28 வயது டிரைவர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. இவர்கள் நட்பாக பழகி வந்த நிலையில், டிரைவர் அந்த இளம்பெணை அவரது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் காரணமாக, அவர் 5 மாத கர்ப்பிணியாகி உள்ளார். இதனால், கருவை கலைக்க வற்புறுத்திய டிரைவர், அவரை வாரணாசியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி அருகேயுள்ள கிராமத்திற்கு சென்று உறவினரை பார்த்து விட்டு வருகிறேன் என கூறி சென்ற இளம்பெண் பின்னர் உயிரிழந்த நிலையில், சடலமாக கொண்டு வரப்பட்டுள்ளார். இதற்கிடையே மருத்துவமனையில் கருக்கலைப்புக்காக சென்ற மருத்துவமனையில்,  சில மருந்துகளை கொடுக்க முயற்சித்ததில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, டிரைவர் உடனடியாக இளம்பெண்ணை வாரணாசியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கருக்கலைப்பு செய்வதற்கான சிகிச்சையில் அந்த இளம்பெண் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, தனது நண்பர் உதவியுடன் இளம்பெண்ணின் உடலை மறைக்க டிரைவர் முயற்சி செய்த போது காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இளம்பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த போது, அதிர்ச்சி மற்றும் அதிக அளவில் ரத்த இழப்பு ஆகியவற்றால் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், டிரைவர், அவரது நண்பர், தனியார் மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் மற்றும் டாக்டர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய அழைத்து சென்றதில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.