"இது நடந்தா நான் அரசியலுக்கே வரமாட்டேன்.!" -விஷால் விட்ட சவால்.!
கள்ளக் காதலியுடன் ஹோட்டலுக்கு சென்ற கணவன்; கோவை சரளா பாணியில் புரட்டி எடுத்த மனைவி..!
கள்ளக் காதலியுடன் ஹோட்டலுக்கு சென்ற கணவன்; கோவை சரளா பாணியில் புரட்டி எடுத்த மனைவி..!
திருமணம் தாண்டிய உறவில் இருந்த கணவன் ஒருவர் மனைவியிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
ஆக்ராவில் உள்ள சிகந்திரா என்ற பகுதியில் வசிக்கும் சஞ்சய் திவாரி என்ற திருமணமான வாலிபர், அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்தப் பெண்ணை அடிக்கடி வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில் சஞ்சை சிகந்திராவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அவருடைய காதலியை அழைத்துச் சென்றுள்ளார். சஞ்சய் வேறு ஒரு பெண்ணுடன் ஹோட்டலுக்குள் செல்வதை பார்த்த ஒருவர், இது குறித்து சஞ்சய் மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சஞ்சயின் மனைவி உடனே கிளம்பி அந்த ஹோட்டலுக்கு வந்தார். அங்கு வந்தவர் கணவன் தங்கி இருந்த அறைக்கு சென்று கணவனையும் அவர் அழைத்து வந்த பெண்ணையும் அடித்து துவம்சம் செய்துள்ளார். அப்போது அந்த பெண் ஹோட்டலில் இருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்நிலையில் ஹோட்டலில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டதால், ஹோட்டல் ஊழியர்கள் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு வந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
மேலும் சஞ்சய்க்கு எதிராக அவரின் மனைவி புகார் எதுவும் கொடுக்காததால், காவல்துறையினர் இந்த சம்பவத்தில் எந்த வகை நடவடிக்கையும் எடுக்காமல் சென்று விட்டனர்.