பிஞ்சு வயதிலேயே ஐந்து வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை.! சிறுவன் செய்த பதற வைக்கும் கொடூரம்...
பிஞ்சு வயதிலேயே ஐந்து வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை.! சிறுவன் செய்த பதற வைக்கும் கொடூரம்...
சட்டீஷ்கரின் ஜஸ்புர் மாவட்டத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த போது மாயமாகியுள்ளனர். அதனை அடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் சுற்றுமுற்றும் தேடி பார்த்துள்ளனர். ஆனால் குழந்தை எங்குமே கிடைக்கவில்லை.
உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது சிறுமியின் சகோதர முறையிலான மைனர் பையன் ஒருவன் சிறுமியை அழைத்து கொண்டு அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளான்.
அங்கு சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு கீழே கிடந்த கல்லால் தலையில் ஓங்கி அடித்து கொலை செய்து பின் உடலை அருகில் இருந்த நீர் வீழ்ச்சி ஒன்றில் போட்டு திரும்பியதாக கூறியுள்ளான். இதனை கேட்ட சிறுமியின் பெற்றோர் கதறி துடித்துள்ளனர். மேலும் சிறுவன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.