கண்ணிமைக்கும் நொடியில் நிகழ்ந்த விபரீதம்... மாப்பிள்ளைக்கு மஞ்சள் பூச வந்த நபர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழப்பு... பதற வைக்கும் வீடியோ!!
கண்ணிமைக்கும் நொடியில் நிகழ்ந்த விபரீதம்... மாப்பிள்ளைக்கு மஞ்சள் பூச வந்த நபர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழப்பு... பதற வைக்கும் வீடியோ!!
தெலுங்கானா மாநிலம் காலாபட்டாரில் திருமண நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு நடைப்பெற்றுள்ளது. அதில் திருமணத்திற்கு முன்பு மாப்பிள்ளைக்கு மஞ்சள் பூசும் விழா நடைபெற்று உள்ளது. அப்போது மாப்பிள்ளை நடுவில் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி உறவினர்கள் ஒருவர் பின் ஒருவராக மாப்பிள்ளைக்கு மஞ்சள் பூசி மகிழ்ந்துள்ளனர்.
அப்போது 40 வயது மதிக்கத்தக்க முகமது ரப்பானி என்ற நபர் மாப்பிள்ளைக்கு மஞ்சள் பூச சென்றுள்ளார். அவர் மாப்பிள்ளையை கிண்டல் செய்தவாறே சிரித்து கொண்டு மஞ்சளை கையில் எடுத்துள்ளார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு முகமது ரப்பானியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவத்தால் திருமண வீடு பெரும் சோகத்தில் மூழ்கியது. நொடி பொழுதில் நிகழ்ந்த இந்த சோக சம்பவ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Groom’s relative #DiedSuddenly at Haldi ceremony 💉👀 pic.twitter.com/HRNqiailD4
— JamaicanPattee 🧡✌️🧡 (@JamaicanPattee) February 23, 2023