அடக்கடவுளே.. இப்படியுமா?.. திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்..! பெற்றோர்கள் பேரதிர்ச்சி..!!

அடக்கடவுளே.. இப்படியுமா?.. திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவர்கள்..! பெற்றோர்கள் பேரதிர்ச்சி..!!



2 college students dead in heart attack

ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பல்கா மாவட்டம், சிலக்கலூரி பேட்டை, பசுமலை பகுதியில் வசித்து வருபவர் பஷீர் பாஷா. இவரது மகன் பிரோஜா கான் (வயது 17). இவர் சிலக்கலூரி பேட்டையில் இருக்கும் தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் துறையில் முதல் வருடம் படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினர் அனைவரும் உணவு அருந்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பிரோஜா கான் திடீரென அலறி கூச்சலிட்டவாறு படுக்கையில் மயங்கி விழுந்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அவரது அறைக்குச்சென்ற பெற்றோர் மகனை எழுப்பு முயற்சித்தும் பலனில்லை. 

இதனால் அவரின் வாயில் தண்ணீர் விட்டு பார்த்துள்ளனர். அத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதனை செய்தபோது அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

India

இதேபோன்று ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்யசாய் மாவட்டம், அச்சம்பள்ளி தாண்டா பகுதியை சார்ந்தவர் தனுஷ் நாயக் (வயது 19). இவரது குடும்பத்தினர் பெங்களூரில் வசித்து வரும் நிலையில், தனுஷ் அனந்தபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பி.பார்மசி படித்து வருகிறார். 

நேற்று இவர் கல்லூரி மைதானத்தில் கபடி விளையாட்டு வந்ததாக தெரியவருகிறது. அப்போது திடீரென மயங்கவே, நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். 

அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்களால் வெளியூர்களில் தங்களின் பிள்ளைகளை படிக்கவைக்கும் பெற்றோர்கள் மிகுந்த அதிர்ச்சியிலும், கவலையிலும் உள்ளனர்.