பலாத்காரம் செய்த இளைஞனின் தாயை துப்பாக்கியால் சுட்ட 16 வயது சிறுமி; பரபரப்பு சம்பவம்.!

பலாத்காரம் செய்த இளைஞனின் தாயை துப்பாக்கியால் சுட்ட 16 வயது சிறுமி; பரபரப்பு சம்பவம்.!



16 years old girl shoots her mother

டெல்லி மாநிலத்தில் உள்ள பஜன்புராவில் 50 வயது பெண்மணி மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு வந்த 16 வயது சிறுமி, தான் மறைத்து எடுத்து சென்ற நாட்டு துப்பாக்கியால் பெண்ணை சுட்டுள்ளார். இதனால் அப்பெண் படுகாயமடைந்து மயங்கி இருக்கிறார். 

துப்பாக்கியால் சுட்ட சிறுமி அங்கிருந்து தப்பி சென்றுவிடவே, விஷயம் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். 

delhi

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி சிறுமியை கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், கடந்த 2021ல் சிறுமியை மளிகைக்கடை நடத்தி வரும் பெண்ணின் 25 வயது மகன் பலாத்காரம் செய்துள்ளான்.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவரை காவல் துறையினர் கைது செய்த்து சிறையில் அடைந்துள்ள நிலையில், இளைஞரின் தாயார் மீது ஆத்திரத்தில் இருந்த சிறுமி தைரியம் வரவழைத்து அவரது தாயாரை துப்பாக்கியால் சுட்டது அம்பலமானது.