கோபத்தில் வெளியேறி, 13 ஆண்டுகள் கழித்து வீட்டிற்கு திரும்பிய மகன்-மகள்.. ஆனந்த கண்ணீரில் ததும்பிய தாய்.!

கோபத்தில் வெளியேறி, 13 ஆண்டுகள் கழித்து வீட்டிற்கு திரும்பிய மகன்-மகள்.. ஆனந்த கண்ணீரில் ததும்பிய தாய்.!



13 Years after mother reunites with Kids uttarpradesh

 

உத்திரபிரதேசம் மாநிலத்த்தில் உள்ள ஆக்ரா பகுதியைச் சார்ந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் என இரண்டு குழந்தைகள் இருந்துள்ளன. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பெண்மணி தனது குழந்தைகளை கண்டித்ததாக தெரியவருகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த அக்கா மற்றும் தம்பி வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வெளியேறி சென்றனர். கடந்த 13 ஆண்டுகளாக இவர்களை காணாது தாய் கண்ணீருடன் தவித்து வந்துள்ளார்.

Latest news

இந்த நிலையில் 13 ஆண்டுகள் கழித்து, தற்போது வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள் இருவரும் பெரியவர்கள் ஆகி தாயை சந்தித்துள்ளனர். இதனால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் குழந்தைகளை கட்டியணைத்து தாய் கண்ணீர் விட்டார்.