நம்பி வந்த 12 வயது சிறுமியை புத்தாண்டு தினத்தில் கூட்டு பலாத்காரம் செய்த 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது...

நம்பி வந்த 12 வயது சிறுமியை புத்தாண்டு தினத்தில் கூட்டு பலாத்காரம் செய்த 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது...



12 year old girl gangraped in delhi

டெல்லி சதர் பஜார் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் அதே பகுதியில் டீ கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவரது கடையில் 12,14 மற்றும் 15 வயதில் மூன்று சிறுவர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சுரேஷ் குமார் புத்தாண்டு தினத்தை கொண்டாட ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து தரும்படி தனக்கு தெரிந்த பெண் ஒருவரிடம் கூறியுள்ளார். 

அந்த பெண்ணும் தனக்கு தெரிந்த பாவனா நகர் பகுதியை 12 வயது சிறுமியை கொண்டுள்ளார். அந்த சிறுமி கழிவுகளை அகற்றும் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பெண் தனக்கு தெரிந்த இடத்தில் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என்னுடன் வா தனிமையான ஒரு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சுரேஷ் குமார் மற்றும் 3 சிறுவர்கள் இருந்துள்ளனர். 

delhi

பின்னர் சிறுமியை சுரேஷ் குமார் உட்பட 4 பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து விட்டு வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது உறவினர் ஒருவரிடம் கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரியவே அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனே மகளிர் காவல் புகார் கொடுத்துள்ளனர்.

அதனையடுத்து போலீசார் போக்கோ சட்டத்தின் கீழ் சுரேஷ் குமார், அந்த பெண் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தனக்குத் தெரிந்த உறவினர் என நம்பிச் சென்ற சிறுமியை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.