12 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை; அரைநிர்வாணமாக மீட்கப்பட்ட சடலம்.!

12 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை; அரைநிர்வாணமாக மீட்கப்பட்ட சடலம்.!



12 Aged Tribal Minor Girl Rape and Murder 

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, கொண்டிலா பகுதியில் 12 வயதுடைய பழங்குடியின சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த 20ம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின் திடீரென மாயமானார். 

அவரை பெற்றோர் தேடி அலைந்தும் கிடைக்காத காரணத்தால், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமியை தேடி வந்தனர். 

இதனிடையே, மறுநாள் சிறுமி அரைகுறையாக ஆடையுடன் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனால் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

சிறுமியின் பலாத்கார மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.