கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
அச்சோ... அயர்ன் பாக்ஸால் சூடு... 10 வயது சிறுமிக்கு கொடுமை...பைலட் மற்றும் கணவர் கைது.!

இந்திய தலைநகர் டெல்லியில் 10 வயது சிறுமியை கொடுமைப்படுத்திய வழக்கில் பெண் பைலட் மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தலைநகர் டெல்லியை சேர்ந்த பெண் பைலட் மற்றும் அவரது கணவர் வீட்டு வேலைகள் செய்வதற்காக பத்து வயது சிறுமியை தங்கள் வீட்டில் வேலைக்கு அமர்த்தியுள்ளனர். அந்த சிறுமியை வேலைக்கு சேர்த்த நாளிலிருந்து அந்த சிறுமிக்கு பல வன்கொடுமைகளை செய்து வந்திருக்கின்றனர்.
மேலும் சிறுமியின் கைகளில் இஸ்திரி பெட்டியால் சூடு வைத்து கொடுமைப்
படுத்தியுள்ளனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தெரிவித்துள்ள காவல் துறையினர்" பைலட் மற்றும் அவரது கணவர் சிறுமியை இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டு வேலைக்காக பணியமத்தியுள்ளனர். மேலும் பனியமர்த்திய நாளிலிருந்து சிறுமிக்கு வன்கொடுமை இழைக்கப்பட்டு இருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது"என தெரிவித்துள்ளனர்.