உஷாரு... அடிக்கடி பயப்படுபவர்களா நீங்கள் அப்போ இந்த நோய் இருக்காம்! நோய்க்கான அறிகுறிகள் இதோ!



understanding-phobia-types-symptoms-treatment

நாம் அனைவரும் எதையாவது பார்த்து, சந்தித்து பயப்படுவது இயற்கையான ஒரு உணர்வு. ஆனால் சிலருக்கு எந்தவிதமான காரணமுமின்றி எல்லா விஷயங்களுக்கும் பயம் ஏற்படுகிறது. இது ஒரு இயல்பான பயமாக இல்லாமல், அதீதமான அச்ச உணர்வைத் தரும். இத்தகைய நிலைமையை "ஃபோபியா" என அழைக்கின்றனர்.

ஃபோபியா என்பது பொதுவாக ஒரு பொருள், இடம் அல்லது சூழ்நிலையைச் சந்திக்கும் பொழுது தோன்றும் மிகவும் கடுமையான பயம். இது நம்மையே அறியாமல் நம்மை ஆட்கொண்டு, மனதை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

போபியாவின் முக்கிய வகைகள்

1. அக்ரோஃபோபியா :

உயரமான இடங்களை பார்த்தால் பயம் ஏற்படுகிறது.

2. கிளஸ்ட்ரோஃபோபியா : 

குறுகிய, மூடப்பட்ட இடங்களில் இருக்கும்போது பயம் ஏற்படும்.

3. அரோஃபோபியா :

விமானத்தில் பயணம் செய்வதற்கான பயம்.

4. சைனோஃபோபியா :

நாய்கள் போன்ற பிராணிகளை பார்த்தாலே பயப்படுதல்.

5. ஜெனோஃபோபியா :

வெளிநாட்டு மக்களை பார்த்தால் வெறுப்பு அல்லது பயம் தோன்றும்.

Types of Phobia

அச்சக் கோளாறுகள் என்றால் என்ன?

எந்தவொரு உண்மையான ஆபத்தும் இல்லாத நிலையில் ஒரு பொருள், இடம், சூழ்நிலை போன்றவற்றை பார்த்தாலே பயப்படுதல் — இதுவே அச்சக் கோளாறு.

இந்த பயம், மன அழுத்தம் காரணமாக ஏற்பட்டாலும், தொடர்ச்சியாக உள்ளவர்கள் சிகிச்சை பெற வேண்டும். இல்லையெனில் இது வாழ்கையில் பெரும் தடையாக மாறும்.

பொதுவான அறிகுறிகள் 

தலைசுற்றல், மயக்கம்

இதயத்துடிப்பு அதிகரித்தல்

கனவுகள் மூலம் பயம்

வியர்வை, மார்புவலி

குமட்டல், வாந்தி

உடல் நடுக்கம்

விழிப்புணர்வு இழப்பு

இந்த அறிகுறிகள் தீவிரமடைந்தால், பதற்றக் கோளாறு உருவாகும் அபாயம் உள்ளது.

ஏற்படும் முக்கிய காரணங்கள்

1. முன் அனுபவங்கள் – விமான பயண பயம், நாய்க்கடி, விபத்து.

2. மரபணு தொடர்பு – குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் மற்றவருக்கும் வரும் வாய்ப்பு.

3. மன அழுத்தம் மற்றும் பதற்றம்.

சிகிச்சை மற்றும் மேலாண்மை

உணர்வுகளை பகிர்ந்துகொள்வது: நபர் என்ன பயப்படுகிறார் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

தியானம், யோகா, சுவாச கட்டுப்பாடு: மன அமைதிக்கு உதவும்.

மனநல நிபுணர் ஆலோசனை: தேவையான சிகிச்சையைத் தருவர்.

பயத்தை குறைக்கும் உணவுகள்

1. பழங்கள் (வாழைப்பழம், கிவி, அன்னாசி): மெலட்டோனின், செரோட்டோனின் அதிகரிக்க உதவுகிறது.

2. ஓமேகா-3 உணவுகள்: சால்மன் மீன் போன்றவை பயத்தை கட்டுப்படுத்தும்.

3. சியா விதைகள்: மன அமைதிக்கு உதவும்.

4. மக்னீசியம், பி-காம்ப்ளெக்ஸ் உள்ள உணவுகள்: முருங்கைக் கீரை, பசலைக் கீரை, அவல்.

5. முளைக்கட்டிய பயறு: நரம்புகள் சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.

6. பச்சை தேநீர்: தூக்கத்தையும் பயத்தையும் கட்டுப்படுத்தும்.

பயம் என்பது இயற்கையான உணர்வு தான். ஆனால் அது உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு இருந்தால், அது ஒரு சிகிச்சை தேவைப்படும் நோயாக மாறும். இதனை நேரத்தில் கவனித்து, உணவியல், மனநல ஆலோசனை  பின்பற்றி ஃபோபியாவை வெல்லலாம்.