அலார சத்தம் கேட்டு எழுவோரா நீங்கள்?.. அச்சச்சோ உங்களுக்குத்தான் பேராபத்து.. விபரம் இதோ.!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெருபாலானோர் சேவல், குருவிகளின் சத்தம் கேட்டு காலையில் எழுந்த காலங்கள் மலையேறி, செல்போனில் ஒன்றுக்கு நான்கு அலாரம் வைத்து நாம் எழுந்து வருகிறோம்.
இவ்வாறாக செல்போனில் அலாரம் வைத்து எழும் நபர்களுக்கு மனரீதியான மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள் வரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஜப்பான் நாட்டில் உள்ள தேசிய ஆரோக்கிய அறிவியல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், அலாரம் எழுப்பும் சத்தம் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என தெரிவித்துள்ளது.
அலாரா ஒலி இதயத்துடிப்பு, இரத்த அழுத்தத்தை அதிகரித்து தொடர்ந்து அதிகரித்து பின்னாட்களில் மன அழுத்தத்தை ஏற்படுகிறது. உடலுளுள் இயங்கும் உடலியக்க கடிகாரம், தனது உடலை தூக்க - விழிப்பு செயல்களுக்கு எதிராக செயல்பட அலாரம் பேருதவி புரிகிறது.
இதுவே நாம் அலாரம் வைத்தாலும் சில நேரம் எழுந்துகொள்ள இயலாமல் உடல் அலுப்பு காரணமாக நம்மை முடக்குகிறது. அலாரம் கேட்டு எழுவோர் தூக்க சுழற்சியை நேரடியாக தடைபடுத்துகின்றனர். சிலர் பதறியபடியும் எழுகின்றனர். இதுவே அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் எதிரியாக அமைகிறது.