பிறந்தவுடன் நடந்த கொடூரம்.! 9 நாய்குட்டிகளை உயிரோடு எரித்த சம்பவம்.!



the-atrocity-that-happened-in-pakistan-incident-of-burn

இந்த உலகில் நமக்கு நன்றியோடு இருக்கும் ஜீவன் என்றால் நாய்குட்டிகள் தான். ஆனால், சிலர் நாய் குட்டிகளை இரக்கமின்றி கொலை செய்கின்றனர். பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் குல்பர்க் கிரின்ஸில் என்ற பகுதியில் பிறந்த 9 நாய்குட்டிகளை உயிரோடு எரித்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பாகிஸ்தானில் வசித்து வரும் விலங்கு பிரியரான இசட் ராசா என்பவர் இப்பதிவை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் பிறந்த 9 நாய்குட்டிகளை உயிருடன் எரித்த கொடூரத்தை பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.

Pakistan

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை இணையத்தில் வெளியாகியுள்ளது. இஸ்லாமாபாத்தில் மருத்துவராக உள்ள பைசல் கான் என்பவர் 9 நாய்குட்டிகள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அதில் ஆரம்பத்திலேயே 8 நாய்குட்டிகள் இறந்துவிட்டதாகவும் ஒரே ஒரு நாய்குட்டி மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த ஒரு நாய்குட்டியும் பல மணி நேரம் சிகிச்சைக்கு பிறகு இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து பலரும், பாகிஸ்தான் அரசு விலங்கு நல அமைப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.