போதையில் வந்த நடிகை யாஷிகா ஆனந்த்! நள்ளிரவில் இளைஞருக்கு ஏற்பட்ட வீபரிதம்.

போதையில் வந்த நடிகை யாஷிகா ஆனந்த்! நள்ளிரவில் இளைஞருக்கு ஏற்பட்ட வீபரிதம்.


yashikaanand

தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.  இதைத்தொடர்ந்து அவர் கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவர் பெருமளவில் பிரபலமானார். இதில் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யாஷிகா. இதை பார்த்த பலரும் யாஷிகாவிற்கு ரசிகர்கள் ஆனார்கள்.

அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும்  சரியாக பயன்படுத்திக்கொண்ட யாஷிகா நடிகர் மஹத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். அதன் பின் பிக்பாஸ் இருந்து வெளியேறிய யாஷிகா தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார்.

yashika

இந்நிலையில் நேற்று நுங்கம்பாக்கத்தில் சொகுசு கார் ஒன்றில் சென்று கொண்டிருக்கும் போது டெலிவரி வேலை செய்யும் இளைஞரான பரத் என்பவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார் நடிகை யாஷிகா. அதுமட்டுமின்றி அங்கிருந்த கடை மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். 

இதில் பரத் பலத்த காயமடைந்துள்ளார். மேலும் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படதாக கூறப்படுகிறது. உடனே காவல் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் பரத்தை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

yashika

அதன் பிறகு விசாரனை மேற்கொண்ட போலீசார் காரில் பயணித்தது நடிகை யாஷிகா என்பதும் மேலும் குடிபோதையில் தான் விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்துள்ளது.