பிரபல தயாரிப்பாளர் குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது.! சினிமா வட்டாரங்களில் பரபரப்பு.!

பிரபல தயாரிப்பாளர் குற்றப்பிரிவு காவல் துறையினரால் கைது.! சினிமா வட்டாரங்களில் பரபரப்பு.!



well-known-producer-arrested-by-police-in-land-forgery

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் ஜான் மேக்ஸ். இவர் திருவள்ளூரைச் சேர்ந்த மோகன் வேல் என்பவரிடம் ஒன்பது லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக  மோகன் வேல் மத்திய குற்ற  பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.

tamil cinemaஇந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் ஜான் மேக்சை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இந்த வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கோலிவுட் சினிமா வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது

tamil cinemaசினிமா தயாரிப்பாளர் ஆன இவர் வெற்றி படங்களான மைனா மற்றும் சாட்டை போன்ற படங்களையும் சவுகார்பேட்டை என்ற திரைப்படத்தையும் தயாரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கைது பற்றிய வேறு எந்த விவரங்களும் தெரியவில்லை.