நிச்சயதார்த்தம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் கேப்டன் விஜயகாந்த்தின் மகன் திருமணம் நடைபெறாததற்கு இது தான் காரணமா...

நிச்சயதார்த்தம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் கேப்டன் விஜயகாந்த்தின் மகன் திருமணம் நடைபெறாததற்கு இது தான் காரணமா...



vijaykanth-son-vijaya-prabhakaran-marriage-updates

தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது.

அதன்பின் படங்களில் நடிப்பதை விடுத்து முழு நேர அரசியலில் இறங்கினார் விஜய்காந்த். ஆனால் அவருக்கு உடல் நல குறைவு ஏற்படவே அரசியலிலும் கவனம் செலுத்த முடியவில்லை. இவர் 1990 ஆம் ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார்.

vijaykanth

நடிகர் விஜயகாந்திற்கு ஷண்முகபாண்டியன், விஜய பிரபாகரன் என இரு மகன்கள் உள்ளனர். இதில், இரண்டாவது மகன் விஜய பிரபாகரனுக்கு கடந்த 2019 டிசம்பரில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோவனின் மகள் கீர்த்தனாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமண நிச்சயதார்த்தம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் விஜய்காந்தின் மகன் திருமணம் நடைபெறவில்லை. அதற்கு காரணம் கொரோனா தொற்று தான் என கூறப்பட்டது. அதோடு மகனின் திருமணத்தை பிரதமர் நரேந்திர மோடி நடத்தி வைக்க வேண்டும் என்று விஜயகாந்த் விரும்புவதாகவும், அவரது தேதிக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த ஆண்டுக்குள் விஜயகாந்தின் மகன் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் விஜய்காந்த் குடும்பத்தினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.