நான் பத்து வருஷமா லாக்டவுனில் இருக்கிறேன்! வேதனையா இருக்கு.. கண்கலங்கிய நடிகர் வடிவேலு!

நான் பத்து வருஷமா லாக்டவுனில் இருக்கிறேன்! வேதனையா இருக்கு.. கண்கலங்கிய நடிகர் வடிவேலு!



vadivelu-sad-speech

தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார் வடிவேலு. அதனை தொடர்ந்து அவர் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து, தனக்கென ஒரு தனி பாணியை பிடித்துள்ளார். 

இந்நிலையில் காமெடி நடிகராக கலக்கி வந்த வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி  படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். பின்னர் சில காரணங்களால், பிரச்சினைகளால் நடிகர் வடிவேலு தமிழ் திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. அதனால் அவர் நீண்ட காலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

    Vadivelu

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் வடிவேலு அவரது நண்பர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் உடல் எடை மிகவும்  மெலிந்து காணப்பட்டார். அது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அப்பொழுது வடிவேலு பாட்டுப் பாடி அசத்தியதுடன் உருக்கமாகவும் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நீங்கள் எல்லாம் ஒரு வருஷம் லாக்டவுனில் இருந்தீங்க. ஆனால் நானோ பத்து வருஷமாவே லாக்டவுனில் தான் இருக்கிறேன். 

மேலும் என் உடம்பில் தெம்பு இருக்கிறது. படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. ஆனால் யாருமே என்னை கூப்பிடுவது இல்லை. வாய்ப்பு இல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருப்பது எவ்வளவு பெரிய ரணம் தெரியுமா என வேதனையுடன் கூறி கண்கலங்கியுள்ளார்.