ரொம்ப நன்றி.. மனைவி ஜோதிகாவிற்காக நடிகர் சூர்யா போட்ட பதிவு.! என்ன கூறியுள்ளார் பாத்தீங்களா!!

ரொம்ப நன்றி.. மனைவி ஜோதிகாவிற்காக நடிகர் சூர்யா போட்ட பதிவு.! என்ன கூறியுள்ளார் பாத்தீங்களா!!



surya-post-for-wife-jothika

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். ஜோதிகாவும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து டாப் நடிகையாக வலம் வந்தவர்.

திருமணத்திற்கு முன்பு சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து  பேரழகன், உயிரிலே கலந்தது சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்துள்ளனர். இவர்களுக்கு தியா,தேவ் என இரு பிள்ளைகள் உள்ளனர். சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் ஜோதிகா, மம்மூட்டியுடன் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடிய சூர்யா அவரது மனைவி ஜோதிகாவுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில், வாழ்க்கையை எப்படி கொண்டாடுவது என எங்களுக்கு காட்டியதற்கு ரொம்ப நன்றி பொண்டாட்டி எனவும்  தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலான நிலையில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.