ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நடந்த அதிர்ச்சி கொள்ளை சம்பவம்! இதைச் செய்தவர்கள் யார்? காவல்துறை தீவிர விசாரணை!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நடந்த அதிர்ச்சி கொள்ளை சம்பவம்! இதைச் செய்தவர்கள் யார்? காவல்துறை தீவிர விசாரணை!


sixty-lakhs-worth-gold-jewels-stolen-from-aishwarya-raj

தமிழ் சினிமாவில் 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்  ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளாவார். கடந்த வருடம் ஜனவரி மாதம் தனுஷுடனான திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்த இவர் தற்போது தனது இயக்குனர் பணியில் முழு கவனமும் செலுத்தி வருகிறார்.

தற்போது இவரது இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் லால் சலாம். இந்தத் திரைப்படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம்  தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

Rajini kanth

இந்நிலையில் இவரது வீட்டில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்று இருக்கிறது. இது தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அந்தப் புகாரில் தனது வீட்டில் இருந்த நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும் அவற்றின் மதிப்பு 60 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Rajini kanth

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டிலிருந்து அறுபது சவரன் நகைகள் மற்றும் நவரத்தின கற்கள் திருட்டுப் போய் உள்ளன. இது தொடர்பாக அவருடைய வீட்டில் பணியாற்றிய மூன்று  வேலைக்காரர்கள் மீது சந்தேகமிருப்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா. இச்சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.