பிரபல பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லை! இரவு ஹோட்டலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
பிரபல பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லை! இரவு ஹோட்டலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை சஞ்சனா. இவர் ஹைதராபாத்தில் உள்ள பப்பிற்கு தனது தோழியுடன் சென்றுள்ளார். அங்கு முன்னாள் எம்.எல்.ஏ. நந்தீஸ்வர் கவுடின் மகன் ஆசிஷ் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சஞ்சனா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரில், பப்பில் ஆசிஷ் கவுட் குடிபோதையில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டார். மேலும் முதல் மாடியில் இருந்து என்னை கீழே தள்ளிவிடப் முயன்றார்.
அந்த பப்பில் ஆசிஷ் கவுட் குடிபோதையில் அவ்வாறு நடந்துகொண்டதற்கு அந்த ஹோட்டல் சிசிடிவி தான் சாட்சி என புகாரில் கூறியுள்ளார். இந்நிலையில் ஆஷிஷ் தற்போது தலைமறைவாகிவிட்டார் என கூறப்படுகிறது.