சமந்தா வெளியிட்ட ஒற்றை புகைப்படத்தால் ஆச்சர்யத்தில் உறைந்த ரசிகர்கள்...

சமந்தா வெளியிட்ட ஒற்றை புகைப்படத்தால் ஆச்சர்யத்தில் உறைந்த ரசிகர்கள்...



samantha-posts-naga-chaitanya-photo-after-divorce

தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென ஏராளமான  ரசிகர்கள்  உள்ளனர்.

நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகரும், பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட  கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

samantha

இந்நிலையில் தற்போது விவாகரத்து ஆன நிலையிலும் சமந்தா நாக சைத்தன்யாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதாவது மஜிலி படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகும் நிலையில் அதற்காக தான் அந்த பதிவை அவர் போட்டிருக்கிறார்.சமந்தா இப்படி செய்து இருப்பது ரசிகர்களுக்கே ஆச்சர்யம் அளித்து இருக்கிறது.