கஷ்டமா தான் இருந்துச்சு., "அந்த விஷயத்துல" சிறப்பா இல்ல... தன் விவாகரத்து குறித்து ஓபனாக பேசிய சமந்தா..!
கஷ்டமா தான் இருந்துச்சு., "அந்த விஷயத்துல" சிறப்பா இல்ல... தன் விவாகரத்து குறித்து ஓபனாக பேசிய சமந்தா..!
தனது விவாகரத்து தொடர்பாக நடிகை சமந்தா ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து கோலிவூட்டில் உச்சபட்ச நடிகையாக இருப்பவர் தான் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நடிகை சமந்தா சமீபகாலமாக மீண்டு வந்து தனது குறிக்கோளில் கவனம் செலுத்தி வருகிறார். அத்துடன் தனது உடலையும் ஃபிட்டாக வைத்து ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது பதிவிட்டு வருவார்.
கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் மிகவும் ட்ரெண்டிங்கான டாபிக்காக இருப்பதே சமந்தாவின் விவாகரத்து தான். சைத்தன்யாவும், சமந்தாவும் ஏன் பிரிந்தார்கள்? என்ற உண்மையான காரணம் தெரியாமல் ரசிகர்கள் பலரும் குழம்பி இருந்த நிலையில், நாக சைதன்யா வேறொருவரை காதலிப்பதாக வதந்திகள் பரவியது. ஆனால் அது முற்றிலும் பொய் என அவர்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இத்தகைய நிலையில், முதல்முறையாக தன்னுடைய விவாகரத்து குறித்து சமந்தா பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "தனது வாழ்க்கை கடினமாக இருந்தது. ஆனால் தற்பொழுது பரவாயில்லை. முன்பை விட நான் மிகவும் தைரியமானவளாக இருக்கிறேன். எனக்கும், அவருக்கும் இடையில் தற்போது சுமூகமான உறவு இல்லை. ஆனால், எதிர்காலத்தில் இந்த நிலை மாறலாம். ஏனெனில் வாழ்க்கையில் அனைத்தும் மாறக்கூடியதே. இதுவரை தனக்கு நடந்த எதுவும் சிறப்பாக நடக்கவில்லை" என்று கூறியுள்ளார்.