இசை வெளியீட்டு விழாவிற்கு வருவதற்கு பயந்த விஜய்.. தயாரிப்பாளர் கூறிய உண்மை சம்பவம்.?

இசை வெளியீட்டு விழாவிற்கு வருவதற்கு பயந்த விஜய்.. தயாரிப்பாளர் கூறிய உண்மை சம்பவம்.?



Prouducer controversy interview about vijay

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் இளையதளபதி விஜய். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்து இளைய தளபதி எனும் பெயர் பெற்றுள்ளார்.

vijay

எனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார் விஜய். இதன்படி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிறது.

மாணிக்கம் நாராயணன் நடிகர் விஜயை பற்றி பேட்டியில் பேசியிருக்கிறார். அவர், "வடிவேலு நடிப்பில் வெளியான இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படத்தை நான் தயாரித்தேன். இதற்கு விஜய், சூர்யா, சிம்பு போன்றவர்களை இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்தேன்.

vijay

விஜய் வருகிறார் என்று சொன்னதும் சூர்யா வந்துவிட்டார். ஆனால் விஜய் நான் வரவில்லை என்று என் கையை பிடித்துக் கொண்டு கெஞ்சினார். நான் எவ்வளவோ கேட்டேன் மறுத்துவிட்டார். ஆனால் இறுதியாக விஜய், இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த சம்பவம் என்னால் மறக்க முடியாது என்ற நிகழ்ச்சியுடன் பேசி இருந்தார். இதற்கு முன்னால் நடந்த இசைவெளியீட்டு விழா சர்ச்சையால் தான் விஜய் இப்பிடி செய்தார் என்று கூறப்பட்டு வருகிறது.