அடுத்து இதான் பிளான்.. இரண்டாவது குழந்தைக்கு தயாரான பிரபல நடிகை?.! குவியும் வாழ்த்துக்கள்..!!

அடுத்து இதான் பிளான்.. இரண்டாவது குழந்தைக்கு தயாரான பிரபல நடிகை?.! குவியும் வாழ்த்துக்கள்..!!



priyanka-chopra-have-a-2nd-baby

நடிகை பிரியங்கா சோப்ரா தனது இரண்டாவது குழந்தையும் வாடகை தாயின் மூலமாக பெற்றுக்கொள்ள இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஃபோர்ப்ஸ் இதழ், உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்மணிகளில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் தேர்ந்தெடுத்திருந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை பிரியங்கா சோப்ரா பாடகர் நிக் ஜோனாசை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் சமீபத்தில் இருவரும் வாடகைதாய் மூலம் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். அந்தப் பெண் குழந்தையின் பெயர் மல்டி மேரி. 

cinema

தம்பதியினர் குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டு தங்களுக்கென ஒரு குழந்தை பிறந்துள்ளதாக தெரியப்படுத்திய நிலையில், "வாடகை தாயின் மூலமாக எங்கள் குழந்தையை பெற்றதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்றும், இந்த ஸ்பெஷலான தருணத்தில் நாங்கள் எங்கள் குடும்பத்தில் முழு கவனத்தையும் செலுத்த இருக்கிறோம். அனைவருக்கும் நன்றி" என்று குறிப்பிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தனது இரண்டாவது குழந்தையையும் நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாயின் மூலமாக பெற்றெடுக்க இருப்பதாக தகவல்கள் தீயாக பரவி வருகிறது. இது குறித்த அறிந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.