இதற்கு பெயர்தான் கண்ணிலே காதலா! நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்!
இதற்கு பெயர்தான் கண்ணிலே காதலா! நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்!

பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டு சினிமாவில் வளம் வருகிறார்.
இவர் வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். எப்போதும் மிகவும் ஜாலியாக இருக்கும் பிரேம்ஜி, நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் மிகவும் வெளிப்படையாகவும் கலகலப்பாகவும் இருப்பார்.
இந்நிலையில் 40 வயதாகியும் திருமணம் ஆகாததால் அவரது பெற்றோர்களும், நண்பர்களும் நீண்ட காலமாக மிகவும் தீவிரமாக திருமணத்திற்கு பெண் தேடிவருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஜாம்பி பட இசை வெளியிட்டு விழாவிற்கு விருந்தினராக வந்துள்ளார். அப்போது விழாவில் நடிகை யாசிக்க ஆனந்த் பக்கத்தில் அமர்ந்துள்ளார். அமர்ந்தது மட்டுமின்றி அவரை வச்ச கண்ணு வாங்காமல் பார்த்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் பிரேம்ஜி கலாய்த்து வருகின்றனர்.
😍😍😍 @iamyashikaanand pic.twitter.com/fXdlNCSVQE
— PREMGI (@Premgiamaren) 22 August 2019