"என் கேரியரில் முக்கியமான திரைப்படம்" தனுஷுடன் இணையும் மாரி செல்வராஜ்.! அவரே வெளியிட்ட தகவல்.!

"என் கேரியரில் முக்கியமான திரைப்படம்" தனுஷுடன் இணையும் மாரி செல்வராஜ்.! அவரே வெளியிட்ட தகவல்.!



mari-selvaraj-who-has-written-the-flamboyant-story-for

‌தமிழ் சினிமாவில் இரண்டு படங்கள் மட்டுமே இயக்கியிருக்கும் நிலையில் முன்னணி இயக்குனராக தன்னை நிலை நிறுத்தியிருப்பவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய இவர் தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கினார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தற்போது இவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

Mari selvaraj

சில நாட்களுக்கு முன்பு தனுஷ்  நடிக்கயிருக்கும் திரைப்படத்தினை மாரி செல்வராஜ்  இயக்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கதை எப்படி இருக்கும் என்று விளக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். அதன்படி இந்த திரைப்படம் ஒரு ஹிஸ்டாரிக்கல் டிராமாவாக உருவாகயிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தனது கேரியரில் இந்த திரைப்படம் ஒரு முக்கியமான மாற்றத்தை கொண்டு வரும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Mari selvaraj

மாமன்னன் திரைப்படத்தினை தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கயிருக்கும் ஸ்போர்ட்ஸ் திரைப்படம் ஒன்றை இயக்கயிருக்கிறார். அதனை தொடர்ந்து தான் தனுஷுடன் இணையவுள்ளார் மாரி செல்வராஜ். தனுஷுடனான மாரி செல்வராஜின் திரைப்படம் தொடங்க 2024 ஆம் ஆண்டு ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் அதுவரை காத்திருக்க வேண்டிவுள்ளது.