கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
மார்பளவு நீரில் தத்தளித்தபடி பொருட்களை வாங்கி வந்த நடிகர்.! இவருக்கே இப்படி ஒரு நிலையா?.!

வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கவிருந்த போதிலும் அதன் மழை பெய்யும் மேகங்களால் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் கடுமையான மழைப்பொழிவை சந்தித்தன.
மேலும் தலைநகர் சென்னை நீரில் தத்தளித்தது. பல தன்னார்வலர்களும் தங்களை மீட்பு பணிகளில் அரசு அதிகாரிகளோடு ஈடுபடுத்திக் கொண்டனர். மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உட்பட நான்கு மாவட்டங்களுக்கு அரசு பொது விடுமுறை விடப்பட்டிருந்தது.
தற்போது மழை குறைந்து தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், லொள்ளு சபா நடிகர் லட்சுமி நாராயணன் தனது வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்றுள்ளார்.
அப்போது அவர் மார்பளவு நீரில் பொருட்களை வாங்கி தத்தளித்தபடி மீண்டும் வீட்டுக்கு வந்தார். பின் பள்ளிக்கரணை வட்டச் செயலாளர் பாபு இரண்டு படகுகளை அனுப்பி வீட்டை விட்டு வெளியே செல்ல நினைத்த குடும்பங்களுக்கு உதவியதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்திருக்கும் நிலையில், மார்பளவு நீரில் நடிகர் அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்றது கவனத்தை ஈர்த்துள்ளது. நல்வாய்ப்பாக எந்த விதமான அசம்பாவிதமும் இன்றி நடிகர் வீடு திரும்பி விட்டார்.
மழைநீர் அதிகம் உள்ள பகுதிகளில் அரசு சார்பில் வீடு வீடாக தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகித்திருந்தால் இந்த பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.