திமிராக பேசிய லாஸ்லியா! அதற்கு கமல் என்ன செய்தார் தெரியுமா?

திமிராக பேசிய லாஸ்லியா! அதற்கு கமல் என்ன செய்தார் தெரியுமா?



kamal-nose-cut-to-loslia


பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 ,மிகவும் விறுவிறுப்பாகவும் , நாளுக்கு நாள் பரபரப்பாகவும்  நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி ஆகிய போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இந்நிலையில்  பிரபல நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து அமைதியாக சென்றுகொண்டிருந்த வீட்டிற்குள்  சர்ச்சைகளை கிளப்பும் வகையில் விருந்தினராக வனிதா மீண்டும்  நுழைந்தார். அதனை தொடர்ந்து சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில் அமைதியாக இருந்த லாஸ்லியாவுக்கு கவின் மீது காதல் வந்தது. அதன் பிறகு அவரை பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. மேலும் கமல் ஹாஸன் முன்பு கால் மீது கால் போட்டு அதை ஆட்டிக் கொண்டே பேசுவதும் பார்வையாளர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

Bigg boss

நேற்றையதினம் கமலிடமே லாஸ்லியா திமிராக பேசியிருப்பார். அப்போது பிக் பாஸ் என்பது போட்டிதளம் இதை ஒரு சுற்றுலாத்தலமாக மாத்திடாதிங்க., உள்ளே போகும் போது யாரையுமே தெரியாது அல்லவா, அப்படியே நினைத்துக் கொண்டு செயல்படுங்க, பொதுவாக சொல்கிறேன் என்று கமல் கூறியது லாஸ்லியாவுக்கு திகைப்பை ஏற்ப்படுத்தியது. 

மேலும் கமல் லாஸ்லியாவுக்கு நோஸ்கட் கொடுத்துள்ளது பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், லாஸ்லியா கமலிடமே பொய் சொல்கிறார். பிக் பாஸ் வீட்டில் திரும்பும் பக்கம் எல்லாம் கேமரா இருப்பதை மறந்துவிட்டு பேசுகிறார் என்று ரசிகர்கள் லாஸ்லியாவை கலாய்த்து வருகின்றனர்.