மாறாதய்யா மாறாது.. தோல்வியை தொடர்ந்து, நடிகர் கமல் ரசிகர்கள் அடித்த போஸ்டரால் பரபரப்பு!!
மாறாதய்யா மாறாது.. தோல்வியை தொடர்ந்து, நடிகர் கமல் ரசிகர்கள் அடித்த போஸ்டரால் பரபரப்பு!!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் 170 தொகுதிகளில் போட்டியிட்ட கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்தவர்களில் . கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், மற்றும் சிங்காநல்லூரில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் மற்றும் டெபாசிட் பெற்றனர்.
மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர். இந்த நிலையில் நேற்று தனது கட்சியின் முக்கிய தலைவர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில் ஆலோசனை முடிந்து வெளியே வந்த முக்கியத் தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ் உட்பட முக்கியத் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், மதுரையில் கமல் ரசிகர்கள், அரசியல் வேண்டாம், எனக்கு ஆசானே போதும். மாறாதையா மாறாது மக்கள் மனமும் குணமும் மாறாது. மாற்ற நினைத்தவர்கள் இங்கு தோற்றுப் போனதே சரித்திரம். ஐந்தில் வளையாதது தமிழகம் ஐம்பதில் வளையுமா?' போன்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.