கடைசி நேரத்தில் கசிந்த தகவல்.. இந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் நபர் இவர்தான்.. யார் தெரியுமா?
கடைசி நேரத்தில் கசிந்த தகவல்.. இந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் நபர் இவர்தான்.. யார் தெரியுமா?
பிக்பாஸ் தமிழ் சீசனில் முதல் முறையாக ஒரே வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் நான்கு நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்கள், வைல்ட் கார்ட் என்ட்ரி என 16 கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடிவந்தநிலையில் ரேக்கா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா, சுசித்ரா, சனம் ஷெட்டி ஆகியோர் இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்னர்.
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றபட இருப்பதாக இன்று வெளியான முதல் ப்ரமோவில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் சோம், நிஷா, ரமேஷ், கேப்ரியல்லா, ஷிவானி மற்றும் ரம்யா ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் சோம் மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் தனி தனி அறைகளில் உட்காரவைக்கப்படுகின்றனர். இவர்களில் ஒருவர்தான் முதல் ஆளாக இந்த வாரம் வெளியேற்றப்பட்ட இருப்பதாக கூறப்படும்நிலையில், ஜித்தன் ரமேஷ்தான் இந்த வாரம் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.