அதிரடி லுக்கில் இறங்கிய பாடகி கெனிஷா பிரான்சிஸ்! இணையத்தில் வைரலாகும் புதிய ஆல்பம் !
அஜித் திரைப்படத்தில் ஆட்டோ ஓட்டுநராக நடித்த பிரபல இயக்குனர்.! அடடே இவர்தானா.?

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் முதலில் இயக்குனராக இருந்து அதன் பிறகு நடிகர்களாக மாறிய பல இயக்குனர்களை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் எஸ் ஜே சூர்யா மிக சிறப்பான இயக்குனர் மற்றும் நடிகர் என்று சொல்லலாம். அவர் தற்போது ஒரு சிறந்த நடிகராக திகழ்ந்து வருகின்றார். இவர் தொடக்கத்தில் இயக்குனர் பாரதிராஜா, பாக்யராஜ் உள்ளிட்ட முக்கிய இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகர் கதாபாத்திரத்திலும் அவர் நடித்து வந்தார். அதன் பிறகு அஜித்குமார் நடித்த ஆசை என்ற திரைப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்தார். அப்போது நடிகர் அஜித்குமாரிடம் ஒரு கதையை தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த திரைப்படத்தில் ஒரு ஆட்டோ ஓட்டுனராக ஒரே ஒரு காட்சியில் நடித்திருப்பார். ஆசை திரைப்படத்தின் போது எஸ்.ஜே. சூர்யா அஜித்திடம் சொன்ன கதை மிகவும் பிடித்துப் போனதால், பின்னாளில் அந்த கதை தான் வாலி திரைப்படமாக உருவெடுத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.