விவகாரத்துக்காக மனைவிக்கு எய்ட்ஸ் நோயை ஏற்படுத்திய கணவன்! அதிர்ச்சி சம்பவம்!.

விவகாரத்துக்காக மனைவிக்கு எய்ட்ஸ் நோயை ஏற்படுத்திய கணவன்! அதிர்ச்சி சம்பவம்!.


husband-create-a-hiv-disease-to-his-wife


மராட்டிய மாநிலத்தில் உமிழ்நீர் வழியாக மனைவிக்கு, கணவர் எய்ட்ஸ் நோயை பரப்பியதாக மனைவி அவரது கணவர் மீது புகார் அளித்துள்ளார்.

ஹோமியோபதி மருத்துவருக்கும் புனே நகரத்தை சேர்ந்த இளம்பெண்ணிற்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணமான நாட்களில் இருந்தே கணவரின் பெற்றோர் பெண்ணிடம் வரதட்சிணை தொடர்பாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

கடந்த வருடம் அந்த பெண்ணிற்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவரான கணவர் அவரது வீட்டில் வைத்தே மருந்துடன் கலந்து எய்ட்ஸ் பாதித்தவரின் உமிழ்நீரை மனைவிக்கு அளித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த பெண்ணிற்கு தொடர்ந்து உடற்கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளனர்.

Husband

அப்போது அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் வெளியானதை அடுத்து மனைவியிடம் விவாகரத்து கேட்டுள்ளார். ஆனால் தமக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட காரணமே எனது கணவர் தான் என அந்த புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, தனியார் மருத்துவமனை ஒன்றில் கணவன் மனைவி இருவரையும் பரிசோதித்ததில், இருவருக்கும் எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஆனால் அரசு மருத்துவமனையில் செய்த பரிசோதனையில் மனைவிக்கு மட்டுமே எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூடுதல் பரிசோதனை செய்ய காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.