அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அழுகிய நிலையில் தூக்கில் சடலமாக தொங்கிய பிரபல நடிகை; துர்நாற்றம் வீசியதால் அம்பலமான சோகம்.!
ஹிந்தி மொழியில் ஒளிபரப்பான தி ட்ரையல், சிஸ்கியான், வாக்மேன், திகி சடணி, ஜகன்யா உபயா உட்பட பல்வேறு வெப்ஸீரிஸ்களில் நடித்து பிரபலமடைந்த பாலிவுட் நடிகை நூர் மலாம்பிகா. தி ட்ரையல் தொடர் நடிகை கஜோல் நடித்து பிரபலமானது ஆகும்.
துர்நாற்றம் வீசியது
இந்நிலையில், நடிகை நூர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, லோகந்த்வாலா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக இவரின் வீட்டில் எந்த விதமான ஆட்கள் நடமாட்டமும் இல்ல நிலையில், இன்று அவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அக்கம் பக்கத்தினர் உணர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: முதல்முறையாக அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.? எந்த நடிகருடன் தெரியுமா.!?

தூக்கில் சடலமாக தொங்கிய நடிகை
இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, நடிகையின் சடலம் அழுகிய நிலையில் பிணமாக தூக்கில் தொங்கி இருக்கிறது.
காவல்துறையினர் விசாரணை
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், நடிகையின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "பாலிவுட்டில் இதனால் தான் நடிக்கல.!" ஓபனாக உண்மையை உடைத்த ஜோதிகா.!