தமிழ் சினிமாவின் அடுத்த சிவகார்த்திகேயன் இவர்தான்.! டாடா தயாரிப்பாளர் பாராட்டு!

தமிழ் சினிமாவின் அடுத்த சிவகார்த்திகேயன் இவர்தான்.! டாடா தயாரிப்பாளர் பாராட்டு!


he-will-be-the-next-big-thing-in-tamil-cinema-dada-prdu

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்னும் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கவின். இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம்  சின்னத்திரையில் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளியான நட்புனா என்னனு தெரியுமா? என்ற திரைப்படத்தின் மூலம்  வெள்ளித்திரையில்  கதாநாயகனாக அறிமுகமானார்.

sivakarthikeyan

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் மூன்றில் கலந்து கொண்டு பிரபலமானவர் இவர். தற்போது இவரது  நடிப்பில்  வெளியாகி இருக்கும் படம் 'டாடா' இந்தத் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் கவின் உடன்  அபர்ணாதாஸ் பாக்கியராஜ்  ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.இத்திரைப்படமானது தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

 

 

sivakarthikeyan

இதில், பேசிய படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்கர் , "தமிழ் சினிமாவின் அடுத்த  சிவகார்த்திகேயனாக வருவதற்குரிய எல்லா தகுதியும்  கவினுக்கு இருப்பதாக பாராட்டினார். மேலும், சிவகார்த்திகேயனை வைத்து மனம் கொத்திப் பறவை என்ற  திரைப்படத்தை தயாரித்தேன். அப்படத்தின் வெற்றியையும்  இந்த விடுதியில் வைத்து தான் கொண்டாடினோம். தற்போது டாடா படத்தின் வெற்றியையும் இங்கே கொண்டாடுகிறோம். நிச்சயமாக சிவ கார்த்திகேயன் இடத்திற்கு கவின் வருவார்." என அவர் பாராட்டினார்.