உசுப்பேத்தும் உடையில் கும்முனு போஸ் கொடுத்த தர்ஷாகுப்தா! புகைப்படத்தை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்....



darsha-gupta-instagram-latest-photo-viral

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முள்ளும் மலரும் சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தர்ஷ குப்தா. அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் செந்தூரப்பூவே, அவளும் நானும் போன்ற சீரியல்களில் நடித்ததோடு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது மற்றுமொரு திறமையான முகத்தையும் காட்டினார். புகழ் உடன் சேர்ந்து செய்த கலாட்டா, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தர்ஷாவுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் வந்தன. ருத்ர தாண்டவம் மற்றும் ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்தார். ஆனால், இரண்டும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர், விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இன்ஸ்டாகிராமில் ஏராளமான பின்தொடர்பவர்கள் உள்ளதால், இவர் இறுதி வரை போட்டியில் இருப்பார் என அனைவரும் நம்பினர். ஆனால், தினமும் தனது கதைகளை பகிர்ந்து அழுகையால் மூன்றாவது வாரத்திலேயே இவர் வெளியேறினார்.

தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் விதவிதமான போட்டோஷூட்களில் கலக்கி வருகிறார். அண்மையில், மிகவும் கவர்ச்சியான உடையில் இரண்டு கைகளையும் தூக்கி நிற்கும் புகைப்படம் ஒன்று வைரலானது. இதற்காக, "ரசிப்பது உன் கண்கள் என்றால், எழுதுவது என் கைகள் அல்லவா?" என்கிற கேப்ஷனும் தந்துள்ளார்.

இதையும் படிங்க: சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் படைத்துள்ள சாதனை! முதல் 4 நாட்களில் இத்தனை கோடி வசூலை பெற்றுள்ளதா?

இதையும் படிங்க: பெரிய மனசுதான் இவருக்கு...நயன்தாராவை பற்றி பிரபுதேவா எப்படி கூறியுள்ளார் பாருங்க!