இனி அதை செய்யாதீங்க.. நடிகை சமந்தா விவாகரத்து விவகாரம்! நீதிபதி விடுத்த அதிரடி உத்தரவு!!
இனி அதை செய்யாதீங்க.. நடிகை சமந்தா விவாகரத்து விவகாரம்! நீதிபதி விடுத்த அதிரடி உத்தரவு!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், பிரபல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களது வாழ்க்கை சுமூகமாக சென்ற நிலையில் இருவரும் பிரியவிருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து சமந்தா- நாக சைதன்யா விவாகரத்திற்கு காரணம் சமந்தாவின் தகாத உறவு, கருக்கலைப்பு என சமூக வலைதளங்களில் பல அவதூறு கருத்துக்கள் பரவி வந்தது. இதுகுறித்து சமந்தா விளக்கம் அளித்தும் எந்தப் பலனும் இல்லை. தொடர்ந்து சமந்தாவை பற்றி பல மோசமான கருத்துக்கள், விமர்சனங்கள் எழுந்துவந்தது. இந்த நிலையில் அவர் தன்னைக் குறித்து அவதூறு பரப்பி வரும் சில யூடியூப் சேனல்கள் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்பதிவு செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி நடிகை சமந்தாவின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட எந்த விஷயங்களையும் சமூக வலைதளங்களில் ஒளிபரப்பக்கூடாது. யூடியூப் சேனல்களில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள சமந்தாவின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளையும் உடனே நீக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் அதேபோல நடிகை சமந்தாவும் தனது சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட பதிவுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட வேண்டாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.