கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
"சிம்புவை நம்பினால் நடுத்தெருவில் தான் நிக்கணும்" புலம்பி தள்ளும் தயாரிப்பாளர்கள்..

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் சிம்பு. தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார். மேலும் சிம்பு அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வார்
இது போன்ற நிலையில், தற்போது பிரபல தயாரிப்பாளர் சிம்புவை பற்றி பேட்டியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் "சிம்புவை நம்பினால் நடுத்தெருவில் தான் நிக்கணும். நடிகைகள் மட்டுமல்லாது பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இவரால் கஷ்டப்பட்டு வருகின்றனர் என்று கூறியிருக்கிறார்.
அதாவது பிரபல இயக்குனர் நெல்சன் முதலில் சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கி பாதி படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து நிலையில் சிம்புவால் அப்படம் தடைப்பட்டு போனது. மேலும் நெல்சனுக்கு இயக்க தெரியவில்லை என்றும் சிம்பு கூறியிருக்கிறார்.
இதனையடுத்து புது முக இயக்குனர் ஒருவர் சிம்புவை வைத்து படம் இயக்க தயாரான போது கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்தையும் சிம்புவின் பெயரில் போட்டு விட்டாராம். இதனால் அந்த இயக்குனர் படமே வேண்டாம் என்று தலை தெறிக்க ஓடிவிட்டார். இவ்வாறு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகைகள் என பலரின் வாழ்வில் விளையாடியதால் சிம்புவை குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் கிளம்பிய வண்ணம் இருந்து வருகின்றன.